Wednesday 20 November 2019

அஸ்வகந்தா சாப்பிடும்முன் இதெல்லாம் தெரிஞ்சுக்குங்க asvakantha benefits




அஸ்வகந்தா அதிகம் நம் வாழ்க்கையில் பயன்படுத்த மறந்து இருப்பது அதே நேரத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டியது.அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு.இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு.சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது.மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு .
பழமையான மூலிகையான அஸ்வகந்தாவை நம்முடைய முன்னோர்கள் ஆயுர்வேத முறையில் ஞாபகமறதியை சரி செய்ய பயன்படுத்தி வந்தனர்.இதில் இயற்கையாகவே நினைவு திறனை அதிகரிக்கும் பண்பு உள்ளது.நம்முடைய உடலுக்கு தேவையான வேதி பொருட்கள் புரதங்கள்,அமினோஅமிலங்கள் இதில் நிரம்பியுள்ளதால் இது நமக்கு நல் ஆற்றலை தருகிறது.

ஆண்மையை அதிகரிப்பது மட்டுமல்ல,அஸ்வகந்தா நம் மூளையின் நேர்மறை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.மூளையில் ஏற்படும் அழற்சி,வயோதிகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.நமது உடலில் உள்ள Free radicals ஐ வெளியேற்றி உடலை ஊக்கமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும். உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை அஸ்வகந்தா சீர் செய்யும்.
Disqus Comments