நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை எண்ணெயை வாங்கி ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்யவேண்டும். கட்டியாக இருக்கும் இலுப்பை எண்ணெயை சூடு செய்ததும் அது கரைய ஆரமிக்கும். எண்ணெய் நன்கு கரைந்ததும் அதை ஆறவைக்க வேண்டும். பிறகு இடுப்பு பகுதியில் எங்கு வலி உள்ளதோ அந்த இடத்தில் இந்த எண்ணெயயை தடவி விட்டு சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை செய்தால் இடுப்பு வலிக்கான உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சுக்கு, மிளகு, பூண்டு, பனை வெள்ளம் மற்றும் பொடுதலை இலை ஆகிய ஐந்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு பொடியாக அரைக்க வேண்டும். இதை காலையில் இரண்டு குண்டுமணி அளவில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.