Friday 28 February 2020

காலையில் வெறும் வயிற்றில் என்னென்ன சாப்பிட்டால் உடம்புக்கு ஆரோக்கியம் healthy morning foods




​தண்ணீர்

 காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது.

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அதாவது காலையில் எழுந்ததும் பல் துலக்கியதும் குறைந்தது ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். சிலர் வெந்நீர் அருந்துவார்கள். ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பதுதான் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரை காட்டிலும் அதிகம். தண்ணீர் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு, போன்ற நோய்கள் கட்டுக்குள் இருக்கும். உடலில் உள்ள அமிலத்தின் தீவிரத் தன்மை குறையும். முக்கால் லிட்டர் நீரை முழுமையாக குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராக பிரித்து குடிக்கலாம்.

பாதாம் பருப்பை தினமும் 6 வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அல்சர், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். முதல்நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.

​இஞ்சி

இஞ்சியில் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. அதனால் எப்போது இஞ்சியைப் பயன்படுத்தினாலும் தோல் நீக்கிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும். இஞ்சி தோலை நீக்கிவிட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பை குறையும். வீசிங், ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு அருமருந்து இஞ்சி. ஆனால் வாய்ப்புண், வயிற்றிப்புண் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. அல்லது மிகக் குறைவான அளவில் தினமும் எடுத்துக் கொள்ளாமல், வாரத்தில் ஒரு நாள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவை சமன்படுத்தும்.

காலையில் வெறும் வயிற்றில் தர்ப்பூசணி சாப்பிடுவது நல்லது. அது உடல் ஆரோக்கியத்தை மேம் படுத்தும். கண்கள் மற்றும் இதயத்திற்கும் நல்லது.


​அருகம்புல்

அல்சருக்கு அருமருந்து அருகம்புல் சாறுதான். அதேபோல அருகம்புல்லை டாக்சின்களை வெளியேற்றவும் பயன்படுத்தலாம். அருகம்புல்லின் இலைப் பகுதியை விட, அதனுடைய தண்டு மட்டும்தான் மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. இந்த இலையின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால் சிலருக்கு வயிற்று போக்கை ஏற்படுத்திக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற அலர்ஜி பண்புகள் உள்ளவர்கள் அருகம்புல்லைத் தவிர்ப்பது நல்லது. அல்லது வெளியில் கிடைக்கும் ரெடிமேட் பொடிகளை வாங்காமல், வீட்டிலேயே ஒரு தொட்டியில் அருகம்புல்லை வளர்த்து அதைப் பயன்படுத்தலாம். மேலும் அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

* காலையில் ஓட்ஸ் உணவுவகைகளை சாப்பிடுவது நல்லது. அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவும்.

* காலை உணவுடன் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அது கலோரியின் அளவை குறைப்பதற்கு துணைபுரியும்.

​வெந்தயம்

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெந்தயம் மிகச் சிறந்த மருந்து. உடல் சூட்டை தணித்துக் குளிர்ச்சியாக்கும். வெந்தயத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வெந்தயத்தை ஊற வைக்காமல் அப்படியே தண்ணீருடனோ அல்லது மோருடனோ சாப்பிடுவது கூடாது. சிலர் வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு விழுங்குவார்கள். அப்படி செய்யக்கூடாது.

Disqus Comments